ஆவி மகனுக்கு பெண் சடலத்தை திருமணம் செய்து வைத்த பெற்றோர்!!

906

Ghost-Marriages

சீனாவில் உள்ள ஒரு பெற்றோர் இறந்து போன தனது மகனின் ஆவிக்கும் இறந்த பெண்ணின் சடலத்திற்கும் திருமணம் செய்து வைத்துள்ளனர்.

கட்டணம் செலுத்தப்பட்ட விளம்பரம் || தேர்தல் விளம்பர தொடர்புகளுக்கு 0719567890

மூட நம்பிக்கை என்பது இலங்கை, இந்தியா உட்பட நமது நாடுகளில் மட்டுமல்ல,சகல உலக நாடுகளிலும் மூட நம்பிக்கைகள் காணப்படுகின்றன.

இப்படியான நிலையில், சீனாவில் இறந்து போன தமது மகனின் ஆவிக்கும் இறந்த பெண்ணின் பிணத்திற்கும் பெற்றோர் திருமணம் செய்து வைத்துள்ளனர்.



சீனாவில் ஷான்ஸி மாகாணத்தில் உள்ள மிகவும் பின் தங்கிய கிராமத்தில் ஒரு குடும்பத்தை சேர்ந்த பெற்றோரின் மகன் கடந்த 3 ஆண்டுகளுக்கு முன்னர் உயிரிழந்து விட்டார்.

தமது மகன் திருமணம் செய்து கொள்ளாத நிலையில் உயிரிழந்ததால், மகனது ஆன்மா சாந்தியடையவில்லை என பெற்றோர் கருதினர். இதனால், இறந்து போன மகனது ஆவிக்கு திருமணம் செய்து வைக்க முடிவு செய்தனர்.

அதே கிராமத்தை சேர்ந்த பெண் ஒருவர் மரணம் அடைந்து விட்டார். உடனே அந்த பெண்ணின் பிணத்துக்கும் தமது மகனது ஆவிக்கும் திருமணம் செய்ய பெற்றோர் எண்ணினர்.

இது குறித்து பெண்ணின் குடும்பத்தினருடன் பேசி சம்மதிக்க வைத்தனர். பின்னர் முறைப்படி மகனது ஆவிக்கும், இறந்த பெண்ணின் பிணத்துக்கும் கோலாகலமாக திரு மணத்தை செய்து வைத்தனர்.

மணப் பெண்ணான இறந்த பெண்ணின் குடும்பத்திற்கு ஆவி மணமகனது பெற்றோர் 1 லட்சத்து 80 ஆயிரம் ரூபாவை வரதட்சணையாக கொடுத்துள்ளன.