உழைப்பாளிகள் தினம்..

1180

May Day

சித்தமதை தினம் உழைப்பில் தந்தவரை
சிந்தையிலே கொள்ளும் ஓர் நாளாம்.
நித்தமவர் உடல் வருத்தி பிறர் வாழ
நித்திரை, பசி மறந்து உழைத்தார்.
முத்தமிட்டு அவர்கரங்கள் உயர்வாய்
முத்தமிழால் போற்றிடுவோம்எந்நாளும்.

கட்டணம் செலுத்தப்பட்ட விளம்பரம் || தேர்தல் விளம்பர தொடர்புகளுக்கு 0719567890

வறுமையது வாழ்வாகி நாளும் துன்பம்
வளமின்றி பசியால் உழல்தல் நன்றோ.
சிறுமையது பணம் பதுக்கும் என்றும்
சினமுறவே வெகுண்டெழுவர் புரட்சி
நன்றே.
பெருமையது நமக்காய் உழைப்போர் வாழ்
பெருமையுடன் காத்தல் நல்லோர்
பண்பே.

தூய்மையது திறம்படவே காப்போர்
வாழ்வு
துன்பமாக இழிவுடனே நோக்கல்
பாவம்.
வாய்மையது சிறப்புறவே பெருமனதாய்
நோக்கில்
வளமாக நம் வாழ்வைத் தந்தவரே
சிறந்தோர்.
தாய்மை போலே தாய் நாட்டை
தரமாய்க் தமைக் கொடுத்துக்
காப்போர்
தன்நிறைவாய் காத்தல் உயர்வே.



-குமுதினி ரமணன்-