மரண அறிவித்தல் : திருமதி செல்வநாயகம் இராசமலர்!!

758

Selvanayakam Rasamalar

கணுக்கேணி மேற்கு முள்ளியவளையைப் பிறப்பிடமாகவும் இலக்கம் 15, பிரதான வீதி, கூமாங்குளத்தை வசிப்பிடமாகவும் கொண்ட திருமதி செல்வநாயகம் இராசமலர்(சின்னமணி) அவர்கள் 27.03.2016 அன்று காலமானார்.

கட்டணம் செலுத்தப்பட்ட விளம்பரம் || தேர்தல் விளம்பர தொடர்புகளுக்கு 0719567890

அன்னார் காலஞ்சென்றவர்களான கந்தையா பார்வதி தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்ற காங்கேசு சின்னமா அவர்களின் அன்பு மருமகளும்,

செல்வநாயகம் (ஓய்வுபெற்ற CTB உத்தியோகத்தர்) அவர்களின் பாசமிகு மனைவியும், ஜெயபாமா, ஜெயவனிதா, இளங்கோ, சசிகரன், சஜிதா ஆகியோரின் பாசமிகு தாயாரும்,



சிவராஜா( மதியாமடு மகாவித்தியாலய அதிபர்), திருச்செல்வம், தர்சிகா, சுபாஜினி, ஸ்ரீதாசன் ஆகியோரின் அன்பு மாமியாரும், பாக்கியம், செல்லத்துரை, அரசு ஆகியோரின் பாசமிகு சகோதரியும்,

செல்வரத்தினம், நடராசா, திரவியம், சொக்கலிங்கம், காலம்சென்ற பவுண்மலர், பொன்ராசா, காலஞ்சென்ற முத்துராசா, விஜயரட்னம், தேவன், சுவேந்திரராசா, ராணி, அற்புதம் ஆகியோரின் மைத்துனியும்,

சியாளினி, பிரவின்ராஜ், சிந்துஜா, நிலு, நிஷாந், அனுஷ்கா, சபியா, டிலக்ஷன், ஜனுஷ், ஜதுஷ், அக்ஸா ஆகியோரின் பாசமிகு பேத்தியாரும் ஆவார்.

அன்னாரின் ஈமைக்கிரிகைகள் 29.03.2016 செவ்வாய்க்கிழமை நண்பகல் 1.00 மணியளவில் அவரது இல்லத்தில் நடைபெற்று, தட்சனாங்குளம் இந்து மயானத்தில் தகனம் செய்யப்படும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர்கள், நண்பர்கள் அனைவரையும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்
குடும்பத்தினர்.
0771529440