தாய்லாந்தில் பாங்கொக் நகருக்கு வெளியிலுள்ள நொன்தாபுரி எனும் இடத்திலுள்ள வட் தா கியன் பௌத்த ஆலயத்தில் இடம்பெற்ற மீள உயிர்ப்பித்தல் தொடர்பான வைபத்தின் போது மக்கள் சவப்பெட்டிகளில் படுத்திருந்தவாறு பிரார்த்தனையில் ஈடுபட்டுள்ளனர்.
மேற்படி பிரார்த்தனையில் ஈடுபட்ட மக்கள் இறந்து பின்னர் மீள உயிர்த்தெழுவதை அடையாளப்படுத்தும் வகையில் அவர்கள் படுத்திருந்த சவப்பெட்டிகள் மீது மதகுருமார் போர்வையைப் போர்த்தி அகற்றும் சடங்கொன்றை மேற்கொள்கின்றனர்.இந்த பிரார்தனை மக்கள் தமது தீய கர்ம வினைகள் அகன்று பரிசுத்தவான்களாக மீள வாழ்க்கையை ஆரம்பிக்க வழிசெய்யும் என அங்குள்ள மக்கள் நம்புகின்றனர்.மேற்படி மத வைபவமானது 2008 ஆம் ஆண்டில் முதன் முதலாக அனுஷ்டிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.