வளர்ப்புப் பற­வை­க­ளுக்­கென 100,000 டொலர் பெறு­ம­தி­யான சொத்தை எழு­தி­வைத்த பெண்!!

461

rescued-birds-1027அமெரிக்­காவைச் சேர்ந்த கோடீஸ்­வரப் பெண்­ணொ­ருவர் தனது கிளி இனத்தைச் சேர்ந்த 32 வளர்ப்புப் பற­வை­க­ளுக்கு 100,000 அமெ­ரிக்க டொலர் பெறு­ம­தி­யான சொத்தை எழு­தி­வைத்து விட்டு இறந்­துள்ளார்.

நியூயோர்க் நகரைச் சேர்ந்த லெஸ்லி ஆன் மன்டெல் (69 வயது) என்ற பெண்ணே இவ்­வாறு தனது வளர்ப்புப் பற­வைகள் ஒவ்­வொன்­றி­னதும் பெயரைக் குறிப்­பிட்டு அவற்­றுக்கு பெரு­ம­ளவு சொத்தை எழுதி வைத்­து­விட்டு இறந்­துள்ளார்.

கட்டணம் செலுத்தப்பட்ட விளம்பரம் || தேர்தல் விளம்பர தொடர்புகளுக்கு 0719567890

அத்­துடன் அந்தப் பற­வை­க­ளுக்கு வெவ்வேறு தினங்­களில் வழங்­கப்­பட வேண்­டிய விசேட உண­வுகள் தொடர்­பான விப­ரங்­களும் அந்த உயிலில் குறிப்­பி­டப்­பட்­டுள்­ளன.

மேலும் அவர் மேற்­படி பற­வை­க­ளுக்­கான நிதி­யத்தின் காப்­பா­ள­ராக தனது மகன் முறை­யான மத்­தி­யூவை பெயர் குறிப்­பிட்­டுள்­ள­துடன் தனது நாயான பொரஸ்றி, பூனை­யான கிகி என்­பற்றைப் பரா­ம­ரிக்கும் பொறுப்­பையும் அவ­ரிடம் ஒப்­ப­டைத்­துள்ளார். லெஸ்­லியின் கணவர் பிரபல விஞ்ஞான புனைக்கதை எழுத்தா ளரான ஆர்தர் ஹெர்பேர்க் ஆவார்.