இன்று தபால்மூல வாக்களிப்பு!!

659

proxy-415x260

எட்­டா­வது பாரா­ளு­மன்றத் தேர்­த­லுக்­கான தபால் மூல வாக்­க­ளிப்பு இன்று மூன்றாம் திகதி ஆரம்­ப­மா­க­வுள்­ளது. இன்றைய தினம் கல்வி திணைக்­களம் மற்றும் பொலிஸ் திணைக்­களம் ஆகி­ய­வற்றின் அதி­கா­ரிகள் தபால் மூல வாக்­க­ளிப்பில் ஈடு­ப­டலாம் என்று அறி­விக்­கப்­பட்­டுள்­ளது.

கட்டணம் செலுத்தப்பட்ட விளம்பரம் || தேர்தல் விளம்பர தொடர்புகளுக்கு 0719567890

மேலும் மீண்டும் ஏனைய அர­சாங்க ஊழி­யர்­க­ளுக்­காக எதிர்­வரும் 5 மற்றும் 6 ஆம் திக­தி­க­ளிலும் தபால் மூல வாக்­க­ளிப்பு நடை­பெ­ற­வுள்­ளது.

பாரா­ளு­மன்றத் தேர்­தலில் தபால் மூலம் வாக்­க­ளிப்­ப­தற்கு 566,823 பேர் தகுதி பெற்­றுள்­ளனர். நடை­பெ­ற­வுள்ள பொதுத்­தேர்­தலில் தபால் மூலம் வாக்­க­ளிப்­ப­தற்­காக 628,925 பேர் விண்­ணப்­பித்­தி­ருந்த நிலையில் தபால் மூலம் வாக்­க­ளிப்­ப­தற்கு 566,823 தகுதி பெற்­றுள்­ளனர்.



எதிர்­வரும் 17 ஆம் திகதி நடை­பெ­ற­வுள்ள எட்­டா­வது பாரா­ளு­மன்­றத்­தேர்­தலில் 225 பாரா­ளு­மன்ற உறுப்­பி­னர்கள் தெரிவு செய்­யப்­ப­ட­வுள்ள நிலையில் அர­சியல் கட்­சிகள் மற்றும் சுயேச்­சைக்­கு­ழுக்கள் சார்­பாக 6151 வேட்­பா­ளர்கள் கள­மி­றங்­கி­யுள்­ளனர்.

எட்­டா­வது பாரா­ளு­மன்றத் தேர்­தலில் நாடு முழு­வதும் மொத்­த­மாக ஒரு கோடியே 50 இலட்­சத்து 44490 பேர் வாக்­க­ளிப்­ப­தற்கு தகுதி பெற்­றுள்­ளனர்.

அத்­துடன் நாடு முழு­வதும் 12021 வாக்­க­ளிப்பு நிலை­யங்கள் அமைக்­கப்­ப­ட­வுள்­ள­துடன் தேர்­த­லா­னது 2014 ஆம் ஆண்டு வாக்­காளர் இடாப்பின் பிர­காரம் நடை­பெ­ற­வுள்­ளது.

தேர்­தலில் மாவட்­டங்­களின் ரீதியில் 196 பாரா­ளு­மன்ற உறுப்­பி­னர்கள் தெரிவு செய்­யப்­ப­ட­வுள்­ள­துடன் 29 பேர் கட்­சி­க­ளுக்கு கிடைக்­கின்ற வாக்­கு­களின் அடிப்­ப­டையில் தேசிய பட்­டியல் தேசிய பட்டியல் மூலம் தெரிவு செய்யப்படவுள்ளனர். அந்தவகையில் 225 பாராளுமன்ற உறுப்பினர்கள் தெரிவு செய்யப்படவுள்ளனர். நாட்டில் 22 தேர்தல் மாவட்டங்கள் உள்ளன.