திருமணம் செய்து கொள்ள பிடிக்கவில்லை ஆனால் குழந்தை பெற்றுக் கொள்ள ஆசையாக உள்ளது என நடிகை ஸ்ருதிஹாசன் தெரிவித்துள்ளார். தமிழ், தெலுங்கில் வலம் வந்த ஸ்ருதிஹாசன் தற்போது இந்தியில் முகாமிட்டுள்ளார்.
இந்நிலையில் தனது திருமணம் குறித்து சமீபத்தில் பேட்டி அளித்தார். அதில், எனது சுதந்திரத்தை யாருக்காவும் இழக்க விரும்பவில்லை. என்னை என் போக்கில் விடும் கணவன் தேவை. அப்படி ஒரு மனிதர் கிடைப்பாரா என்பது சந்தேகம் தான்.
உறவு என்ற பெயரில் எனது சுதந்திரத்தை களவாடிவிடக் கூடாது.
இதில் இரண்டாவது என்ற கருத்துக்கே இடமில்லை. எனக்கு திருமணத்திலோ, கேர்ள் பிரண்ட் போன்ற உறவுகளிலோ நம்பிக்கையில்லை. ஆனால் குழந்தைகள் என்றால் எனக்கு ரொம்ப பிடிக்கும், குழந்தை பெற்றுக் கொள்ள ஆசையாக உள்ளது என அதிரடியாக பேட்டி அளித்துள்ளார்.