இத்தாலியில் உணவளித்த வயோதிபரை கடித்துக் கொன்ற 3 புலிகள்..

629

tiger

இத்தாலியில் கூண்டில் அடைக்கப்பட்டிருந்த புலிகளுக்கு உணவளிக்கச் சென்ற 72 வயது முதியவரை 3 புலிகள் கடித்துக் கொன்றன. இத்தாலியின் வடக்கே உள்ள மலைப் பகுதியில் இருந்த பினெரோலோ வனவிலங்கு காப்பகம் பொருளாதார நெருக்கடியால் 2009ம் ஆண்டு மூடப்பட்டது. ஆயினும் காப்பகத்தில் இருந்த விலங்குகள் அனைத்தும் அதே இடத்தில் வைத்து பராமரிக்கப் பட்டு வருகின்றன.

கட்டணம் செலுத்தப்பட்ட விளம்பரம் || தேர்தல் விளம்பர தொடர்புகளுக்கு 0719567890

தற்போது அங்கு நிறைய புலிகள் உள்ளன. இந்தக் காப்பகத்தில் 72 வயது நபர் ஒருவர் புலிகளுக்கு உணவளிக்கும் பணியைச் செய்து வருகிறார். சம்பவத்தன்று, வழக்கம் போல் உணவளிக்கச் சென்ற அவரை கூண்டுக்குள் இருந்த 3 புலிகள் திடீரென தாக்கின.

புலிகள், முதியவரின் கழுத்தைக் கடித்துக் குதறுவதைப் பார்த்து அதிர்ந்து போன அவரின் மனைவி உடனடியாக, மீட்புப் படையினருக்கு தகவல் அளித்தார். ஆனால், எவ்வளவோ போராடியும் இறந்து போன முதியவரின் சடலத்தை மட்டுமே அவர்களால் மீட்க முடிந்தது.