திருகோணமலை பொது வைத்தியசாலையில் முற்றாகத் துண்டிக்கப்பட்டிருந்த கையினை சத்திர சிகிச்சை மூலம் மீண்டும் பொருத்தி இவ் வைத்தியசாலை வைத்தியர்கள் சாதனை புரிந்துள்ளனர்.
இச் சத்திர சிகிச்சை சம்பவம் கடந்த வாரம் மேற்கொள்ளப்பட்டது. அறுவைச் சத்திர சிகிச்சை நிபுணர் ரொகான் சிறிசேன தலைமையிலான வைத்தியர் குழுவே மேற்படி சிகிச்சையினை வெற்றிகரமாக மேற்கொண்டு நிறைவு செய்தது.
இதுவரை காலமும் இப்பொது வைத்தியசாலைக்கு இவ்வாறான சிகிச்சைக்கு அனுமதிக்கப்படுவோர் கண்டி மற்றும் கொழும்பு போன்ற மருத்துவ மனைகளுக்கு மாற்றப்பட்டே சத்திர சிகிச்சை மேற்கொள்ளப்பட்டு வந்தனர்.
திருகோணமலை பொது வைத்தியசாலையில் தற்போது சகல சிகிச்சைகளும் மேற்கொள்ளப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.