அனைத்துப் பல்கலைக்கழக மாணவர் பேரவை ஒழுங்கமைத்துள்ள பாரிய பேரணியொன்று தற்போது கொழும்பு ஸ்ரீ ஜெயவர்தனபுர பல்கலைக்கழகத்திலிருந்து ஆரம்பமாகி ஹை லெவல் வீதி வழியாக கொழும்பு பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு நோக்கிசென்று கொண்டிருக்கிறது.
இதன்போது பிரசுரிக்கப்பட்ட துண்டுப்பிரசுரத்தில் இலவசக் கல்வியை இலவசமாகப் பெறுவதற்காக போராடுவதாக தெரிவிக்கப்பட்டிருக்கிறது.
மேலும், இலங்கையில் தனியார் பல்கலைக்கழகங்களுக்கு அனுமதி வழங்கப்படுவதற்கும் எதிர்ப்புத்தெரிவித்து கோஷங்கள் எழுப்பப்பட்டன.
பெருந்திரளானோர் பங்குபெற்றும் இவ் ஆர்ப்பாட்ட பேரணி காரணமாக நுகேகொட மற்றும் ஹை லெவல் வீதி பகுதிகளில் பாரிய வாகன நெரிசல் காணப்படுகிறது.