சவுதி அரேபியாவில் சட்டவிரோதமாக தங்கியிருக்கும் வெளிநாட்டு பணியாளர்களுக்கான மன்னிப்புக் காலம் நீடிக்கப்பட்டுள்ளது.
எதிர்வரும் நவம்பர் 4ஆம் திகதி வரை மன்னிப்புக் காலம் நீடிக்கப்பட்டுள்ளதாக வெளிநாட்டு வேலை வாய்ப்புக்கள் அமைச்சர் டிலான் பெரேரா தெரிவித்துள்ளார்.
சவுதி அரேபியாவில் சட்டவிரோதமாக தங்கியிருக்கும் வெளிநாட்டு பணியாளர்களின் மன்னிப்புக் காலம் நாளை நிறைவடையும் நிலையில் இந் நீடிப்பு அறிவிக்கப்பட்டுள்ளது.