உயர்தர பரீட்சையில் விஞ்ஞானப் பிரிவில் வவுனியா முஸ்லிம் மகாவித்தியாலய மாணவன் முகமட் முபாரக் முகமட் பர்ஹத் முதல் இடம் பிடித்து சாதனை படைத்துள்ளார்.
2024ஆம் ஆண்டு உயர்தரப் பரீட்சைப் பெறுபேறுகள் நேற்று (26.04.2025) வெளியாகின. அதில் விஞ்ஞானப் பிரிவில் வவுனியா தெற்கு கல்வி வலயத்தைச் சேர்ந்த முஸ்லிம் மகாவித்தியாலயத்தில் கல்வி கற்ற முகமட் முபாரக் முகமட் பர்ஹத் என்ற மாணவன் 3A சித்திகளை பெற்றுள்ளார்.
அவர், மாவட்ட மட்டத்தில் முதலாம் இடத்தையும், தேசிய ரீதியில் 187ஆவது இடத்தையும் பெற்றுள்ளார். இவருக்கு வவுனியா நெற் வாசகர்கள் சார்பாக வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம்.