உயர்தர பரீட்சையில் வர்த்தகப் பிரிவில் வவுனியா நெளுக்குளம் கலைமகள் வித்தியாலய பிதுர்சா சற்குணம் என்ற மாணவி முதல் இடம் பிடித்து சாதனை படைத்துள்ளார்.
2024 ஆம் ஆண்டு உயர்தரப் பரீட்சைப் பெறுபேறுகள் நேற்று (26.04) வெளியாகின. அதில் வர்த்தகப் பிரிவில் வவுனியா தெற்கு கல்வி வலயத்தைச் சேர்ந்த நெளுக்குளம் கலைமகள் வித்தியாலயத்தில் கல்வி பிதுர்சா சற்குணம் என்ற மாணவி 3ஏ சித்திகளை பெற்று மாவட்ட மட்டத்தில் முதலாம் இடத்தையும், தேசிய ரீதியில் 357 ஆவது இடத்தையும் பெற்று சாதனை படைத்துள்ளார்.
இவருக்கு வவுனியா நெற் வாசகர்கள் சார்பாக வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம்.