பஸ் – லொறி மோதி விபத்து : இராணுவ சிப்பாய்கள் உட்பட 22 பேர் காயம்!!

354

நிட்டம்புவை – கிரிந்திவெல வீதியில் இடம்பெற்ற விபத்தில் இராணுவ சிப்பாய்கள் உட்பட 22 பேர் காயமடைந்துள்ளதாக கிரிந்திவெல பொலிஸார் தெரிவித்தனர்.

கட்டணம் செலுத்தப்பட்ட விளம்பரம் || தேர்தல் விளம்பர தொடர்புகளுக்கு 0719567890

இந்த விபத்து இன்று திங்கட்கிழமை (21) காலை இடம்பெற்றுள்ளது. இராணுவ சிப்பாய்களை ஏற்றிச் சென்ற பஸ் ஒன்று எதிர்த்திசையில் பயணித்த லொறியுடன் மோதியதில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.



நிட்டம்புவையிலிருந்து கிரிந்திவெல நோக்கிப் பயணித்த பஸ் ஒன்றே இவ்வாறு விபத்துக்குள்ளாகியுள்ளது.

விபத்தின் போது, பஸ் சாரதியும் அதில் பயணித்த 21 இராணுவ சிப்பாய்களும் காயமடைந்துள்ள நிலையில் சிகிச்சைக்காக வத்துபிட்டிவல வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

இது தொடர்பான மேலதிக விசாரணைகளை கிரிந்திவெல பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.