வவுனியா மாவட்ட பாடசாலைகள் உதைபந்தாட்ட சங்கம் நடத்திய உதைபந்தாட்ட சுற்றுப்போட்டியில் ஆண்கள் பிரிவில் வவுனியா தமிழ்மத்திய மகாவித்தியாலயமும் பெண்கள் பிரிவில் நெளுக்குளம் மகாவித்தியாலமும் வெற்றிவாகை சூடியது.
கடந்த இரு தினங்களாக இடம்பெற்றுவந்த சுற்றுப் போட்டி இறுதிநாள் நிகழ்வு வவுனியா யங்ஸ்ரார் விளையாட்டுக் கழக மைதானத்தில் நேற்று (18.04) மாலை இடம்பெற்றிருந்தது.
பரபரப்பான இறுதிப்போட்டியில் ஆண்கள் பிரிவில் வவுனியா தமிழ் மத்திய மகாவித்தியாலயமும், பெண்கள் பிரிவில் நெளுக்குளம் மகாவித்தியாலயமும் வெற்றிக்கிண்ணத்தை கைப்பற்றின. வெற்றிபெற்ற அணிகளுக்கான வெற்றிக்கேடயங்கள விருந்தினர்களால் வழங்கிவைக்கப்பட்டது.