இலங்கையில் கடந்த சில நாட்களாக வெப்பம் அதிகரித்து காணப்படும் நிலை தொடர்பில் வளிமண்டளவியல் திணைக்களம் எச்சரிக்கைகளை விடுத்து வருகிறது.
அதன்படி வடக்கு வடமத்திய, வடமேல், மேல், தென் மற்றும் கிழக்கு மாகாணங்களிலும் இரத்தினபுரி, மொனராகலை மாவட்டங்களிலும் வெப்பநிலை உயரக்கூடும் என தெரிவிக்கப்படுகின்றது.
கண்டி, கேகாலை, மாத்தளை, பதுளை, நுவரெலியா, ஆகிய மாவட்டங்கள் தவிர்ந்த ஏனைய மாவட்டங்களுக்கு 39 – 45 பாகை செல்சியஸ் வரை வெப்பம் அதிகரிக்க கூடும் எனவும் தெரிவிக்கப்படுகின்றது.
எனவே நாட்டில் நிலவும் வெப்பமான நிலை தொடர்பில் யாழ் மாவட்ட அனர்த்த முகாமைத்துவ பிரதிப் பணிப்பாளர் T.N.சூரியராஜா கருத்து தெரிவிக்கையில்,