மனைவி தொல்லைத் தாங்கலை. நான் நிரந்தரமாக தூங்கப் போகிறேன் என்று தாயிடம் கூறி விட்டு, மகன் தற்கொலைச் செய்துக் கொண்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியையும், சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது.
உத்தரப்பிரதேச மாநிலத்தில் பரேலியில் வசித்து வந்தவர் ராஜ் ஆர்யா. 28 வயதான இவர் , “அம்மா, நான் நிரந்தரமாக தூங்கப் போறேன்” என தனது தாயிடம் கூறிய 28 வயதான ராஜ் ஆர்யா, காவல் நிலையத்தில் ஒரு இரவு கழித்த பிறகு தூக்குப் போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
அதாவது ராஜ் மற்றும் அவரது மனைவி சிம்ரன் இடையேயான உறவு பல மாதங்களாகவே சண்டை சச்சரவுடன் இருந்ததாக குடும்பத்தினர் தெரிவித்துள்ளனர்.
மேலும், ராஜ் மீது தாக்குதல் நடத்தியதோடு, அவரை மனஉளைச்சலுக்கு ஆளானார். சிம்ரனின் சகோதரர் போலீசாக இருப்பதால் தன் சகோதரியின் கணவரை காவல் நிலையத்தில் வைத்து துன்புறுத்தியதாக கூறப்படுகிறது.
இந்த சம்பவத்திற்கு 2 நாட்களுக்கு முன் ராஜ், தனது மனைவியை திருமண நிகழ்வில் கலந்துக் கொள்வதற்காக சஹாரன்பூரில் அவரது மாமனார் வீட்டிற்கு அழைத்து செல்ல முயற்சித்துள்ளார். ஆனால் சிம்ரனின் குடும்பம் அதை எதிர்த்து, ராஜையும் அவரது தந்தையையும் தாக்கியதாக ராஜின் சகோதரி புகார் தெரிவித்துள்ளார்.
ன்னர், சிம்ரனின் குடும்பம், ராஜ் மற்றும் அவரது குடும்பத்தினருக்கு எதிராக பெண்கள் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர் . இந்த புகாரின் பேரில் காவல் நிலையம் அழைத்து செல்லப்பட்டு விசாரணை நடத்தப்பட்டது. அதன் பிறகு வீடு திரும்பிய ராஜ் மிகுந்த மன உளைச்சலில் இருந்ததாக தெரிகிறது.
இந்நிலையில், “நான் இப்போது தூங்கப்போகிறேன், என்னை தொந்தரவு செய்யாதீர்கள்” என தாயிடம் கூறியுள்ளார். தாயார் அதை சாதாரண மன அழுத்தம் எனக்கூறினாலும் அவரை எழுப்ப சென்றபோது, ராஜ் தூக்கில் தொங்கிய நிலையில் காணப்பட்டார்.
குடும்பத்தினர், இது ஒரு திட்டமிட்ட துன்புறுத்தல் காரணமாக நிகழ்ந்த தற்கொலை எனக் கூறி, சிம்ரன் மற்றும் அவரது குடும்பத்தினருக்கு எதிராக நடவடிக்கை எடுக்க வேண்டும் என புகார் அளித்துள்ளனர்.