பசறை – பதுளை வீதியில் பெல்கஹதென்ன பிரதேசத்தில் நேற்று வியாழக்கிழமை (10.04) இடம்பெற்ற விபத்தில் மாடு ஒன்று உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
கார் ஒன்று வீதியில் பயணித்த மாடு மீது மோதியதில், சாரதியின் கட்டுப்பாட்டை இழந்த கார் வீதியை விட்டு விலகி குடைசாய்ந்ததில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.
விபத்துக்குள்ளான காரின் சாரதி பலத்த காயங்கள் இன்றி உயிர் தப்பியுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.