கொழும்பு – கண்டி வீதியில் கேகாலை, மீபிட்டிய பிரதேசத்தில் பாரஊர்தி ஒன்று வீதியோரத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த முச்சக்கரவண்டிகள் மீது மோதி விபத்துக்குள்ளாகியுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
இந்த விபத்து கடந்த செவ்வாய்க்கிழமை (08) இடம்பெற்றுள்ளது. விபத்தின் போது எவருக்கும் எந்தவித காயங்களும் ஏற்படவில்லை என பொலிஸார் தெரிவித்தனர்.
பாரஊர்தியை செலுத்திச் சென்ற சாரதியின் கவனக்குறைவே இந்த விபத்துக்கு காரணம் என பொலிஸார் தெரிவித்தனர். விபத்தில் 6 முச்சக்கரவண்டிகளுக்கு பாரிய சேதங்கள் ஏற்பட்டுள்ளதாக பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.