ஏப்ரல் 15 ஆம் திகதியை பொது விடுமுறையாக அறிவிப்பது குறித்து இன்னும் முடிவு எடுக்கப்படவில்லை என்று பொது நிர்வாகம், மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சர் சந்தன அபேரத்ன தெரிவித்துள்ளார்.
நாடாளுமன்ற உறுப்பினர் ரவி கருணாநாயக்க இன்று (10) நாடாளுமன்றத்தில் எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கும் போதே அமைச்சர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
வெள்ளிக்கிழமையும் புனித வெள்ளி வருவதால், குறிப்பிட்ட வாரத்தில் வேலை நாட்களாக மூன்று நாட்கள் மட்டுமே உள்ளன.
எனவே அந்த திகதியில் விடுமுறை குறித்து இன்னும் முடிவு எடுக்கப்படவில்லை என்றும் அமைச்சர் சந்தன அபேரத்ன குறிப்பிட்டுள்ளார்.