2025 ஆம் ஆண்டிற்காக அரச மற்றும் அரச அங்கீகாரம் பெற்ற பாடசாலைகளின் கல்வி நடவடிக்கைகள் மற்றும் விடுமுறை தொடர்பில் கல்வி அமைச்சு அறிவித்துள்ளது.
கல்வி அமைச்சு இன்று(09) வெளியிட்டுள்ள அறிவித்தலிலேயே இந்த விடயம் குறிப்பிடப்பட்டுள்ளது. முதலாம் தவணையின் 2ஆம் கட்ட கல்வி நடவடிக்கைகள் எதிர்வரும் 11ஆம் திகதியுடன் நிறைவடையவுள்ளது எனக் கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது.
அதனை தொடர்ந்து முதலாம் தவணையின் 3 ஆம் கட்ட கல்வி நடவடிக்கைகள் எதிர்வரும் 21 ஆம் திகதி ஆரம்பமாகி, மே மாதம் 9 ஆம் திகதி வரை நடைபெறும் என குறிப்பிடப்பட்டுள்ளது.