மீரிகம – பஸ்யால வீதியில் இதிபரபே பகுதியில் இடம்பெற்ற விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளதாக மீரிகம பொலிஸார் தெரிவித்தனர். இந்த விபத்து, ஞாயிற்றுக்கிழமை (06.04) இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
மீரிகமவில் இருந்து பஸ்யால நோக்கிப் பயணித்த மோட்டார் சைக்கிள் ஒன்று வேகக் கட்டுப்பாட்டை இழந்து வீதியில் கவிழ்ந்து எதிர்த்திசையில் பயணித்த கெப் வண்டியுடன் மோதியதில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.
விபத்தில் மோட்டார் சைக்கிளின் செலுத்துனர் உயிரிழந்துள்ளார். உயிரிழந்தவர், பொகலகம பிரதேசத்தைச் சேர்ந்த 27 வயதுடைய இளைஞன் ஆவார்.
உயிரிழந்தவரின் சடலம் மீரிகம வைத்தியசாலையின் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளது. இது தொடர்பான மேலதிக விசாரணைகளை மீரிகம பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.