யாழில் தாதிக்கு நேர்ந்த சோகம் : பணியாற்றிய வைத்தியசாலையிலேயே உயிரைவிட்ட சோகம்!!

1192

தெல்லிப்பழை ஆதார வைத்தியசாலையில் தாதிய உத்தியோகத்தராக கடமை புரியும் பெண்ணொருவர் விபத்தில் சிக்கிய நிலையில் நேற்று (03) உயிரிழந்துள்ளார்.

கட்டணம் செலுத்தப்பட்ட விளம்பரம் || தேர்தல் விளம்பர தொடர்புகளுக்கு 0719567890

வட்டுத் தெற்கு, சித்தங்கேணி பகுதியைச் சேர்ந்த 52 வயதுடைய பெண் ஒருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார். குறித்த பெண் கடந்த மாதம் புதன்கிழமை (26) அன்று இரவு கடமைக்காக மோட்டார் சைக்கிளில் வைத்தியசாலைக்கு சென்றுகொண்டிருந்தார்.

இதன்போது அராலி நோக்கி வந்துகொண்டிருந்த மோட்டார் சைக்கிள், விளான் சந்தி பகுதியில் அவரது மோட்டார் சைக்கிளுடன் மோதி விபத்து சம்பவித்துள்ளது.



இந்நிலையில் படுகாயமடைந்த குறித்த தாதி தெல்லிப்பழை ஆதார வைத்தியசாலையில் சேர்ப்பிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்துள்ளார். இருப்பினும் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார். சடலம் மீதான மரண விசாரணைகள் நடத்தப்பட்டு சடலம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.