யாழ்ப்பாணம்-கச்சேரிக்கு முன்பாக காரும் கப் ரக வாகனமும் மோதி விபத்து இடம்பெற்றுள்ளது. குறித்த விபத்தானது நேற்று (03.04) மதியம் இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இந்த சம்பவம் குறித்து மேலும் தெரியவருகையில், இன்று மதியம், கச்சேரிக்கு அண்மித்த பகுதியில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த கார் மீது, சாவகச்சேரியில் இருந்து யாழ்ப்பாணம் நோக்கி வந்த கப் ரக வாகனம் ஒன்று மோதி விபத்து சம்பவித்துள்ளது.
இதன்போது, இரண்டு வாகனங்களும் சேதமடைந்துள்ளதுடன் எவருக்கும் காயங்கள் எதுவும் ஏற்படவில்லை. சாரதியின் தூக்க கலக்கம் காரணமாக விபத்து சம்பவித்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
மேலும், விபத்து தொடர்பான விசாரணைகளை யாழ்ப்பாணம் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.