வடகிழக்கு அமெரிக்க மாநிலங்கள் மற்றும் கிழக்கு கனடாவில், 2025ஆம் ஆண்டின் முதல் சூரிய கிரகணம் தோன்றவள்ளது.
இந்த நிகழ்வு இன்று இடம்பெறவுள்ளதாக சர்வதேச வானியலாளர்கள் தெரிவித்துள்ளனர். இந்த சூரிய சூரிய கிரகணத்தின் போது ஒரு அரிய வான நிகழ்வை காணலாம் என்று கூறப்படுகிறது.
கடந்த ஏப்ரல் 8, 2024 அன்று ஏற்பட்டதை போல முழு சூரிய கிரகணம் இல்லாவிட்டாலும், இந்த பகுதி சூரிய கிரகணம் சூரியன் உதிக்கும் போது நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த கிரகணத்தின் போது, சூரியன், சந்திரன் மற்றும் பூமியின் சீரமைப்பு சற்று மையத்திலிருந்து விலகி இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதனால் மிக ஆழமான கிரகணம் ஏற்படுகிறது.
மிகப்பெரிய கிரகணத்தின் புள்ளி கனடாவின் கியூபெக்கின் நுனாவிக் பகுதியில் நிகழும் என்றும், அங்கு 94% சூரிய உதயத்தின் போது சந்திரனை கிரகணம் மறைப்பதை காண முடியும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
வட அமெரிக்காவில் இந்த நிகழ்வு சூரிய உதயத்தின் போது நிகழும் என கூறப்பட்டுள்ளது. மேலும் நுனாவிக் முதல் கியூபெக், நியூ பிரன்சுவிக் மற்றும் மைனே வரையிலான டெர்மினேட்டரில் உள்ள சில இடங்களில் இது உதிக்கும் என்று தெரிகிறது.
இதன்படி , இது ஒரு “இரட்டை சூரிய உதயம்” போல் தோன்றும் என்று கூறப்படுகிறது. இதனால், சில இடங்களில் “சூரிய கொம்புகள்” (Solar Horns) என அழைக்கப்படும் விசித்திரமான தோற்றம் உருவாகும்.
வடகிழக்கு அமெரிக்க மாநிலங்களில், குறிப்பாக மைனே, நியூ ஹாம்ப்ஷயர் மற்றும் மாசசூசெட்ஸ் மற்றும் கிழக்கு கனடாவில், நியூ பிரன்சுவிக் மற்றும் கியூபெக்கில் மிக எளிதாக அட்லாண்டிக் கடற்கரையில் ஒரு சிறிய கிரகண சூரிய உதயத்தைக் காணலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.