நாட்டு மக்களுக்கு வளிமண்டலவியல் திணைக்களத்தின் முக்கிய எச்சரிக்கை!!

438

நாட்டின் சில பகுதிகளில் பாரிய மின்னல் தாக்கம் மற்றும் பலத்த மழை தொடர்பான எச்சரிக்கையொன்றை வளிமண்டலவியல் திணைக்களம் விடுத்துள்ளது.

கட்டணம் செலுத்தப்பட்ட விளம்பரம் || தேர்தல் விளம்பர தொடர்புகளுக்கு 0719567890

இன்று பிற்பகல் 1:00 மணிக்கு வெளியிடப்பட்ட இந்த அறிவித்தல் இன்று இரவு 11:00 மணி வரை செல்லுபடியாகும் என்று திணைக்களம் தெரிவித்துள்ளது.

அதன்படி, மேல், சப்ரகமுவ, மத்திய, தென் மற்றும் ஊவா மாகாணங்களிலும் அம்பாறை மாவட்டத்திலும் மாலை அல்லது இரவு வேளைகளில் இடியுடன் கூடிய மழையுடன் பலத்த மின்னல் தாக்கங்கள் ஏற்படக்கூடும்.



இடியுடன் கூடிய மழை பெய்யும் போது அந்தப் பகுதிகளில் தற்காலிகமாக பலத்த காற்று வீசக்கூடும்.

அத்துடன், மின்னல் தாக்கங்களினால் ஏற்படக்கூடிய அபாயங்களைக் குறைப்பதற்குத் தேவையான நடவடிக்கைகளை எடுக்குமாறு வளிமண்டலவியல் திணைக்களம், பொது மக்களை அறிவுறுத்தியுள்ளது.