யாழிலிருந்து சென்ற வாகனம் விபத்து : மற்றுமொருவர் மரணம் – ஆபத்தான நிலையில் மனைவி!!

1168

களனிப் பல்கலைக்கழகத்தின் தத்துவத் துறையின் உளவியல் பிரிவின் பிரதானி, சிரேஸ்ட விரிவுரையாளர் கலாநிதி கயந்த குணேந்திர திடீர் விபத்தில் உயிரிழந்த நிலையில் அவரது குடும்பத்தில் மேலும் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

கட்டணம் செலுத்தப்பட்ட விளம்பரம் || தேர்தல் விளம்பர தொடர்புகளுக்கு 0719567890

பேராசிரியரின் மனைவி தற்போது மிகவும் ஆபத்தான நிலையில் சிகிச்சை பெறும் நிலையில் குறித்த வாகனத்தில் பயணித்த அவரது சகோதரர் உயிரிழந்துள்ளார்.

விரிவுரையாளர் கயந்த குணேந்திரா மற்றும் அவரது குடும்பத்தினரும் யாழ்ப்பாணத்திற்கு சுற்றுலா சென்ற திருப்பிய நிலையில் விபத்துக்குள்ளாகி உள்ளனர்.



மத்திய அதிவேக நெடுஞ்சாலையில் அவர்கள் பயணித்த வேன் லொறியின் பின்புறத்தில் மோதிய விபத்தில் 46 வயதான விரிவுரையாளர் உயிரிழந்தார்.

விபத்தில் காயமடைந்த அவரது மூன்று பிள்ளைகள், மனைவி மற்றும் இரண்டு பேர் கொழும்பு தேசிய வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்தனர்.

மனைவியின் தாயும் மூன்று பிள்ளைகளும் குணமடைந்த நிலையில் மருத்துவமனையில் இருந்து வெளியேறியுள்ளனர். எனினும் நேற்று இரவு மனைவியின் சகோதரர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.

தீவிர சிகிச்சைப் பிரிவில் ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்று வந்தவரே இவ்வாறு உயிழந்துள்ளார்.