வாயில் துணியை வைத்து இரட்டைக் குழந்தைகளைக் கொன்ற தாய்!!

546

அத்தனை அழகாய் இருக்கிறார்கள். எப்படித் தான் கொல்ல மனசு வந்ததோ? தனது இரட்டைக் குழந்தைகளை கொஞ்சமும் குற்ற உணர்ச்சியின்றி வாயில் துணியைத் திணித்து கொலைச் செய்திருக்கிறார் பெற்ற தாய்.

கட்டணம் செலுத்தப்பட்ட விளம்பரம் || தேர்தல் விளம்பர தொடர்புகளுக்கு 0719567890

உத்திரகான்ட் மாநிலம் ஹரித்துவார், ஜ்வாலாப்பூர் பகுதியைச் சேர்ந்த 20 வயதுடைய இளம்பெண் ஒருவர், திருமணம் முடித்து கணவர், 2 குழந்தைகளுடன் வசித்து வந்தார். இரட்டை குழந்தைகளான இருவரும் ஆறு மாத கைக்குழந்தைகள்.

இந்த பெண்மணியின் கணவர் தனியார் நிறுவனத்தில் பணிபுரிந்து வருகிறார். திடீரென 2 கைக்குழந்தைகளும் மர்மமான முறையில் மயங்கி இருந்தன. அவர்களை மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றபோது அவர்கள் உயிரிழந்ததாக மருத்துவர்கள் தெரிவித்தனர்.



இந்த குழந்தைகளின் மரணத்தில் மர்மம் இருப்பதாக பெண்ணின் கணவர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். இந்த புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்த அதிகாரிகள், இளம் பெண்ணிடம் விசாரணை நடத்தினர்.

அப்போது, பெண்மணி தான் வெளியே கடைக்கு சென்றதாகவும், பின் மீண்டும் வரும்போது குழந்தைகள் மயங்கி இருந்ததாகவும் கூறியுள்ளார்.

கணவரும் அப்போது வீட்டில் இல்லை என முன்னுக்கு பின் முரணான பதிலளித்துள்ளார். இதனையடுத்து சந்தேகப்பட்ட காவல்துறையினர், தீவிர விசாரணை நடத்தினர்.

அப்போது, குழந்தைகளின் இளம் தாய் 2 குழந்தைகளையும் கொலை செய்ததை ஒப்புக் கொண்டார். தினமும் குழந்தைகள் இரவு நேரத்தில் அழுதுகொண்டு இருப்பதை தொடர்கதையாக இருந்துள்ளது.

குழந்தையின் அழுகையை நிறுத்தவும் முடியவில்லை. இது ஒருகட்டத்தில் குழந்தைகள் மீதான அதிருப்தியை உண்டாக்கியுள்ளது.

இதனால் குழந்தை வாயில் துணியை அழுத்தி இருக்கிறார். இதனால் மூச்சுத்திணறிய குழந்தைகள் பரிதாபமாக உயிரிழந்ததாக பரபரப்பு வாக்குமூலம் அளித்துள்ளார். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியையும், சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது.