வவுனியா சிறைச்சாலையில் 77 ஆவது சுதந்திர தினத்தை முன்னிட்டு இருவர் விடுதலை!!

1241

நாட்டின் 77 ஆவது சுதந்திர தினத்தை வவுனியா சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டிருந்த இருவர் விடுவிக்கப்பட்டனர். 77 ஆவது சுதந்திர தினத்தையடுத்து ஜனாதிபதியின் பொது மன்னிப்பின் கீழ் நாடு முழுவதும் சிறைக்கைதிகள் இன்று (04.02.2025) விடுதலை செய்யப்பட்டனர்.

கட்டணம் செலுத்தப்பட்ட விளம்பரம் || தேர்தல் விளம்பர தொடர்புகளுக்கு 0719567890

சிறு குற்றங்களுக்காக குறுகிய கால சிறைத்தண்டனை விதிக்கப்பட்ட கைதிகளே இவ்வாறு விடுதலை செய்யப்பட்டனர். அவர்கள் செலுத்த வேண்டிய அபராதங்கள் இரத்து செய்யப்பட்டுள்ளதுடன் , சிறு குற்றங்களுக்காக கைதாகி தண்டனையின் பாதியை நிறைவு செய்த கைதிகளுமே இவ்வாறு பொது மன்னிப்பு வழங்கி விடுவிக்கப்பட்டுள்ளனர்.



அதன்படி வவுனியா விளக்கமறியல் சிறைச்சாலையில் இருந்து இரண்டு கைதிகள் விடுவிக்கப்பட்டனர். கைதிகளை விடுவிக்கும் நிகழ்வில் வவுனியா சிறைச்சாலை அத்தியட்சகர் ரங்கன பேரேரா , பிரதான சிறைச்சாலை பிரதானி உட்பட சிறைச்சாலை உத்தியோகத்தர்கள் என்பவர்கள் பங்குபற்றியிருந்தனர்.