கல்வி அபிவிருத்தி குழுமத்தின் ஏற்பாட்டில் வவுனியா மாவட்ட முன்பள்ளி ஆசிரியர்களுக்கான முன்பள்ளி தொடர்பான விழிப்புணர்வு கருத்தரங்கு நிகழ்வொன்று நேற்று (01.02.2025) வவுனியா மாவட்ட செயலக கேட்போர் கூடத்தில் இடம்பெற்றது.
வவுனியா மாவட்ட மேலதில அரசாங்க அதிபர் திரு.தி.திரேஸ்குமார் தலைமையில் இடம்பெற்ற மேற்படி கருத்தரங்கில் பாராளுமன்ற உறுப்பினர் ப.சத்தியலிங்கம் பிரதம விருந்தினராக கலந்துகொண்டார்.
அத்துடன் கல்வி அபிவிருத்தி குழுமத்தின் பிரதிநிதிகள், வவுனியா தெற்கு உதவிக் கல்விப்பணிப்பாளர், வவுனியா வடக்கு உதவிக் கல்விப் பணிப்பாளர், பாடசாலை அதிபர்கள், முன்பள்ளி இணைப்பாளர்கள் உள்ளிட்ட வவுனியா மாவட்ட முன்பள்ளி ஆசிரியர்கள் பலரும் நிகழ்வில் கலந்துகொண்டிருந்தனர்.