வவுனியாவைச் சேர்ந்த பெண் மருதானை பொலிஸ் நிலையத்தில் தற்கொலை : மேலதிக தகவல்!!

789

கொழும்பு – மருதானை பொலிஸ் நிலையத்தில் உள்ள பெண்கள் சிறைக்கூடத்தில் நேற்றையதினம் (22.01) சடலமாக மீட்கப்பட்ட பெண் குறித்து சில தகவல்கள் வெளியாகி உள்ளன.

கட்டணம் செலுத்தப்பட்ட விளம்பரம் || தேர்தல் விளம்பர தொடர்புகளுக்கு 0719567890

மேலும், குறித்த பெண்ணின் உடலை பிரேத பரிசோதனை நடைபெறும் வரை பொலிஸ் நிலைய பிணவறையில் வைக்குமாறு மாளிகாகந்த நீதவான் லோச்சனி அபேவிக்ரம வீரசிங்க உத்தரவிட்டுள்ளார். சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருகையில்,

32 வயதான குறித்த பெண் மருதானை பொலிஸாரால் கைது செய்யப்பட்டிருந்த நிலையில், நேற்றையதினம் (22) தற்கொலை செய்து கொண்டுள்ளார். உயிரிழந்தவர் பெண், வவுனிக்குளம் – அம்பாள்புரம் பகுதியைச் சேர்ந்தவர் என தெரிவிக்கப்பட்டுள்ளது.



போதைப்பொருள் வைத்திருந்த குற்றத்திற்காக பிறப்பிக்கப்பட்டிருந்த பிடியாணைக்கு அமைய நேற்று முன்தினம் (21.01) இரவு மருதானை பொலிஸாரால் அவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

கைதான பெண் போதைப் பழக்கத்திற்கு அடிமையானவர் என்றும், சிறைச்சாலையின் இரும்புக் கதவில் தனது பாவாடையை கட்டிக்கொண்டு தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளதாக கூறப்படுகின்றது.

தேசிய மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு அவசர சிகிச்சைப் பிரிவில் சிகிச்சை பெற்று வந்த நிலையில், சிகிற்சை பலனின்றி பெண் உயிரிழந்தார். இந்த சம்பவம் தொடர்பாக நீதவான் நேரில் சென்று விசாரணை நடத்தினார்.