அஜர்பைஜானில் உள்ள பாகுவில் இருந்து ரஷ்யாவின் க்ரோஸ்னிக்கு பறந்து கொண்டிருந்த விமானம் ஒன்று கீழே விழந்து விபத்துக்குள்ளானதில் 42 பேர் உயிரிழந்திருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
இந்த விபத்து சம்பவம் நேற்றையதினம் (25-12-2024) பகல் இடம்பெற்றுள்ளதாக கஜகஸ்தான் அவசரக்கால அமைச்சகம் தெரிவித்துள்ளது.
அக்டாவ் விமான நிலையம் அருகே அந்த விமானம் விழுந்து வெடிக்கும் பதைபதைக்க வைக்கும் காட்சிகள் வெளியாகியுள்ளது.
இந்த விபத்தில் 42 பேர் வரை உயிரிழந்துள்ளதாகவும், 27 பேர் உயிர் பிழைத்துள்ளதாகவும் முதற்கட்ட தகவல் வெளியாகி உள்ளது.
மேலும், கஜகஸ்தானில் விபத்துக்குள்ளான விமானத்தில் எந்தெந்த நாட்டை சேர்ந்த பயணிகள் பயணித்துள்ளனர் என்பதற்கான தகவல் தற்போது வெளியாகியுள்ளது.
குறித்த விமானத்தில் அஜர்பைஜான் நாட்டை சேர்ந்த 37 பயணிகளும் ரஷ்யாவை சேர்ந்த 16 பயணிகளும் கஜகஸ்தானை சேர்ந்த 6 பயணிகளும் கிர்கிஸ்தானை சேர்ந்த 3 பயணிகளும் பயணித்துள்ளதாக சொல்லப்படுகிறது.