அம்பாறையில் நான்கு நாட்களின் பின் மீட்கப்பட்ட சடலம்!!

270

அம்பாறையில் ஆற்று வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்ட நபர் ஒருவரின் சடலம் 4 நாட்களின் பின்னர் மீட்கப்பட்டுள்ளது.

கட்டணம் செலுத்தப்பட்ட விளம்பரம் || தேர்தல் விளம்பர தொடர்புகளுக்கு 0719567890

கடந்த 26 ஆம் திகதி அன்று கிட்டங்கி ஆற்றுக்கு குறுக்காக பயணம் செய்த 48 வயது மதிக்கத்தக்க குறித்த நபர் வெள்ள நீரினால் அடித்து செல்லப்பட்ட நிலையில் காணாமல் போயிருந்தார்.

இந்நிலையில் 4 நாட்களாக தேடுதல் நடவடிக்கையில் ஈடுபட்டு வந்த கடற்படையினர் இன்று (29) திரவந்திய மேடு பகுதியில் கரையொதுங்கிய சடலத்தை மீட்டுள்ளனர்.



மீட்கப்பட்ட சடலம் கல்முனை ஆதார வைத்தியசாலைக்கு சடலம் எடுத்து செல்லப்பட்டிருந்த நிலையில் அங்கு சடலத்தை அவரின் உறவினர்கள் அடையாளம் காட்டியுள்ளனர்.

சடலமாக மீட்கப்பட்டவர் கல்முனை பாண்டிருப்பு பகுதியை சேர்ந்த நாகலிங்கம் சுரேஸ் (வயது-48) என அடையாளம் காணப்பட்டுள்ளார். சடலம் மீதான மேலதிக நடவடிக்கைகளை பொலிஸார் மேற்கொண்டுள்ளனர்.