வீட்டில் உறங்கிக்கொண்டிருந்த இளைஞன் மாயம் : தவிக்கும் பெற்றோர்!!

1058

களுத்துறை, பண்டாரகமை பிரதேசத்தைச் சேர்ந்த 21 வயதுடைய இளைஞன் ஒருவன் காணாமல் போயுள்ளதாக மில்லனிய பொலிஸார் தெரிவித்தனர்.

கட்டணம் செலுத்தப்பட்ட விளம்பரம் || தேர்தல் விளம்பர தொடர்புகளுக்கு 0719567890

இளைஞன் கடந்தஞாயிற்றுக்கிழமை (24.11.2024) இரவு தனது பெற்றோர் மற்றும் சகோதரனுடன் இரவு உணவை உட்கொண்டு பின்னர் தனது அறைக்குள் உறங்கச் சென்றுள்ளார்.

இந்நிலையில், இளைஞனின் தாய் மறுநாள் திங்கட்கிழமை (25.11) அதிகாலை 04.30 மணியளவில் காலை உணவை தயாரிப்பதற்காகச் சமையல் அறையை நோக்கிச் செல்ல முயன்ற போது வீட்டின் கதவு திறந்து கிடப்பதை அவதானித்துள்ளார்.



பின்னர் தாய் வீட்டின் கதவை மூடிவிட்டு இளைஞனின் அறைக்குள் சென்று பார்த்த போது கட்டிலில் உறங்கிக் கொண்டிருந்த இளைஞன் காணாமல் போயுள்ளதை அவதானித்துள்ளார்.

இதனையடுத்து இளைஞனின் பெற்றோர் பிரதேசவாசிகளின் உதவியுடன் இளைஞனைத் தேடும் பணியில் ஈடுபட்டுள்ள நிலையில் எந்தவித தகவல்களும் கிடைக்காததால் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு அளித்துள்ளனர்.

இந்நிலையில் தொடர்பான மேலதிக விசாரணைகளை மில்லனிய பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.