வவுனியாவில் சிறப்பாக இடம்பெற்ற பாரதி முன்பள்ளி கலைவிழா

வவுனியா பாரதி முன்பள்ளியின் கலைவிழாவானது பாடசாலையின் அதிபர் ஜெயராஜா சந்திரா தலைமையில் வவுனியா நகர கலாசார மண்டபத்தில் மிகச்சிறப்பாக இடம்பெற்றது
இந்நிகழ்வின் பிரதம விருந்தினராக வவுனியா பல்கலைக்கழக பேராசிரியர் பூங்கோதை செல்வராஜன் அவர்களும் சிறப்பு விருந்தினர்களாக நகரசபை செயலாளர் அரசரட்ணம் பாலகிருபன் , வவுனியா சைவப்பிரகாச மகளிர் கல்லூரி அதிபர் ரமேஷ் ரட்ணதேவி , வவுனியா சைவப்பிரகாச ஆரம்பப் பாடசாலை அதிபர் துவாரகேசன் கார்த்திகா அவர்களும் கௌரவ விருந்தினர்களாக கிராம சேவையாளர் சபாஸ் வவித்திரா , முன்னாள் கிராம சேவையாளர் கந்தையா விஜயகுமார் அவர்களும் கலந்து கொண்டிருந்தமையுடன் விருந்தினர்களாக முன்பள்ளி மாணவர்களின் பெற்றோர்கள் , பொதுமக்கள் , நலன்விரும்பிகள் என பலரும் கலந்து கொண்டிருந்தனர்.