இலங்கையில் தனிப்பட்ட கணக்குகள் ஊடுருவல் : பொலிஸார் எச்சரிக்கை!!

689

இலங்கையில் அதிகரித்து வரும் ஒன்லைன் மோசடிகளுக்கு மத்தியில், ஒன்லைன் மோசடி செய்பவர்கள் தனிப்பட்ட கணக்குகளை மட்டுமே ஊருடுவியுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

கட்டணம் செலுத்தப்பட்ட விளம்பரம் || தேர்தல் விளம்பர தொடர்புகளுக்கு 0719567890

வங்கி அமைப்புகள் அல்லது நிதி நிறுவனங்களின் கணக்குகளை ஊடுருவல் செய்த சம்பவங்கள் இலங்கையில் அல்லது உலகில் எங்கும் பதிவாகவில்லை என பொலிஸ் ஊடக பேச்சாளர் நிஹால் தல்துவ எச்சரிக்கை விடுத்துள்ளார்.

பல்வேறு நபர்களின் தனிப்பட்ட கணக்குகளை ஊடுவல் செய்த பல சம்பவங்களில் பல மில்லியன் ரூபாய்களை மோசடி செய்பவர்களால் மோசடி செய்யப்பட்டதாக பதிவாகியுள்ளது.



முன்னணி தனியார் வங்கியொன்றின் தனிப்பட்ட கணக்கு அண்மையில் ஊடுருவல் செய்யப்பட்டு சுமார் 80 மில்லியன் ரூபாய் மோசடி செய்யப்பட்டதாக அவர் கூறினார். தனிநபர்கள் தங்கள் பொறுப்பற்ற நடத்தை மற்றும் அலட்சியத்தால் இந்த மோசடிகளில் சிக்கிக் கொள்கிறார்கள்.

கணக்கு வைத்திருப்பவர்களுக்கு ஏற்படும் நிதி இழப்புகளுக்கும் வங்கிகளுக்கும் எந்தப் பொறுப்பும் இல்லை.

சமீப நாட்களில் நாட்டின் பல்வேறு பகுதிகளில் உள்ள சைபர் முகாம்களில் சோதனை நடத்தி 500 கையடக்க தொலைபேசிகள் மற்றும் 250 மடிக்கணினிகளை கைப்பற்றியதுடன் சீன மக்கள் உட்பட 200க்கும் மேற்பட்ட வெளிநாட்டவர்கள் கைது செய்யப்பட்டனர்.

மோசடி செய்பவர்கள் ஹோட்டல்கள் மற்றும் வாடகை வீடுகளில் தங்கியுள்ளனர். தங்களுடைய வீட்டை வாடகைக்கு விடுபவர்கள் தங்கள் வீடுகளில் மோசடிகள் நடப்பதை அறிந்திருப்பது விசாரணையில் தெரியவந்துள்ளது.

இந்த மோசடி செய்பவர்கள் வெளிநாட்டு மற்றும் உள்ளூர் கணக்குகளில் ஊடுருவி கிரிப்டோ கரன்சியாக லட்சக்கணக்கில் பணத்தை மோசடி செய்கின்றனர்.

மோசடி செய்பவர்கள் இலங்கையைத் தேர்ந்தெடுப்பதற்கு சில காரணங்கள் இருக்கலாம். பொருளாதார நெருக்கடிகள் காரணமாக இலங்கையர்கள் நிதிச் சலுகைகள் குறித்த இத்தகைய கவர்ச்சிகரமான செய்திகளுக்கு எளிதில் சிக்கிக் கொள்ளும் வாய்ப்புகள் இருக்கலாம் என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.