வவுனியா – மன்னார் வீதியில் விபத்து : இளைஞன் பலி!!

3326

வவுனியா, பூவரசங்குளம் குருக்கள்புதுக்குளம்பகுதியில் இன்று (27.09.2024) பிற்பகல் இடம்பெற்ற விபத்தில் இளைஞர் ஒருவர் ஸ்தலத்திலேயே பலியாகியுள்ளதாக பூவரசன்குளம் பாெலிசார் தெரிவித்தனர்.

கட்டணம் செலுத்தப்பட்ட விளம்பரம் || தேர்தல் விளம்பர தொடர்புகளுக்கு 0719567890

வவுனியா குருக்கள்புதுக்குளம் பகுதியிலிருந்து வவுனியா நோக்கி சென்ற மோட்டார் சைக்கிள் கட்டுப்பாட்டை இழந்து மின்கம்பத்துடன் மாேதி விபத்துக்குள்ளானது.



இதன்பாேது விபத்துக்குள்ளான மாேட்டார் சைக்கிள் தீப்பற்றி எரிந்ததுடன், பயணித்த இளைஞனும் சம்பவ இடத்திலேயே மரணமடைந்துள்ளார். இச் சம்பவத்தில் 30 வயதுடைய குருக்கள்புதுக்குளம் பகுதியை சேர்ந்த செல்வகுமார் சர்மிலன் என்ற இளைஞரே மரணமடைந்தவராவார்.

இது தொடர்பான மேலதிக விசாரணைகளை பூவரசங்குளம் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.