வவுனியா வைத்தியாசலையில் பிறந்து மரணித்த சிசுவின் உடலை மாவட்ட நீதிபதி பார்வையிட்டு விசாரணைகளை மேற்கொண்டார்.
குறித்த சிசுவின் மரணம் வைத்தியர்களின் அசமந்தத்தால் ஏற்பட்டதாக சிசுவின் தந்தை வவுனியா பொலிசில் முறைப்பாடு செய்திருந்தார்.
இதனையடுத்து நேற்று (21.08.2024) மாலை வவுனியா வைத்தியசாலைக்கு வருகை தந்த நீதிபதி சிசுவின் சடலத்தை பார்வையிட்டதுடன், தந்தையிடம் இது தொடர்பான வாக்குமூலங்களை பெற்றுள்ளதுடன் விசாரணைகளையும் மேற்கொண்டிருந்தார்.