தெற்கு அதிவேக நெடுஞ்சாலையில் கோர விபத்து : 5 பேர் வைத்தியசாலையில் அனுமதி!!

609

தெற்கு அதிவேக நெடுஞ்சாலையில் கொழும்பு நோக்கிப் பயணிக்கும் வீதியில் இரண்டு மகிழுந்துகள் மோதி விபத்துக்குள்ளானதில் 5 பேர் காயமடைந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளார்.

கட்டணம் செலுத்தப்பட்ட விளம்பரம் || தேர்தல் விளம்பர தொடர்புகளுக்கு 0719567890

பத்தேகம மற்றும் பின்னதுவைக்கு இடையில் இன்று (21) பிற்பகல் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.

கொழும்பு நோக்கி பயணித்த மகிழுந்து ஒன்று வீதியை விட்டு விலகி பாதுகாப்பு வேலியில் மோதி பின்னால் வந்த மற்றுமொரு மகிழுந்துடன் மோதியுள்ளது.



இந்த விபத்தில் காயமடைந்தவர்களில் 13 வயது குழந்தையும், இரண்டு பெண்களும் அடங்குவதாக தெரிவிக்கப்படுகின்றது.

இவ்வாறு காயமடைந்தவர்கள் சிகிச்சைக்காக பத்தேகம மற்றும் கராப்பிட்டிய வைத்தியசாலைகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக பின்னதுவ தெற்கு அதிவேக நெடுஞ்சாலை பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

அத்துருகிரிய மற்றும் மத்துகம பிரதேசங்களைச் சேர்ந்தவர்கள் கதிர்காமத்திலிருந்து வீடு திரும்பும் போது இந்த விபத்தில் சிக்கியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.