வெளிநாடொன்றில் பரிதாபமாக உயிரிழந்த இலங்கை இளைஞன் உள்ளிட்ட இருவர்!!

546

இத்தாலியில் பிரிந்தா ஆற்றில் தனது நண்பர்களுடன் நீராட சென்ற இலங்கையர் உட்பட இருவர் உயிரிழந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

கட்டணம் செலுத்தப்பட்ட விளம்பரம் || தேர்தல் விளம்பர தொடர்புகளுக்கு 0719567890

இச் சம்பவத்தில் 23 வயதான ரமேஷ் கணேகெடெர என்ற இலங்கையரே உயிரிழந்துள்ளதாக இத்தாலிய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,



ஆற்றில் மூழ்கிக்கொண்டிருந்த இலங்கை இளைஞனை காப்பாற்றுவதற்காக சென்ற ருமேனிய பிரஜையும் நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளதாக அந்நாட்டு பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

குறித்த சம்பவத்தில் உயிரிழந்த இலங்கை இளைஞன் உதைபந்தாட்ட வீரர் எனவும், அவரை காப்பாற்ற முற்பட்ட வேளையில் உயிரிழந்த ருமேனிய பிரஜை மல்யுத்த வீரர் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

உயிரிழந்த இலங்கையர் இத்தாலியின் பதுவாவில் வசித்து வந்தவர் என அந்நாட்டு பொலிஸார் மேலும் தெரிவித்துள்ளனர்.

இந்த நிலையில் தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்திற்கு வரவழைக்கப்பட்டு இளைஞர்களின் சடலங்களை மீட்டதாக தெரிவிக்கப்படுகிறது.