திருகோணமலையில் பெண் ஊழியரை பலவந்தமாக முத்தமிட்ட அதிகாரிக்கு 13 ஆண்டுகள் கழித்து கிடைத்த தண்டனை!!

416

திருகோணமலையில் பலவந்தமாக பெண் ஊழியரை முத்தமிட்ட அதிகாரிக்கு ஏழு வருட கடூழிய சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

கடந்த 2011ஆம் ஆண்டு தனக்கு கீழ் பணிபுரிந்த பெண் எழுத்தர் ஒருவரை கட்டித்தழுவி முத்தமிட்ட குற்றத்திற்காக நிறுவனத்தின் மனித வள மேலாளருக்கு ஏழு வருட கடூழிய சிறைத்தண்டனை விதித்து மேன்முறையீட்டு நீதிமன்றம் திங்கட்கிழமை (24.06.2024) தீர்ப்பளித்தது.

2015 ஆம் ஆண்டு திருகோணமலை மேல் நீதிமன்ற நீதிபதி, சந்தேகத்தின் பலனை குற்றம் சாட்டப்பட்டவருக்கு சாதகமாக வழங்கி, குற்றம் சாட்டப்பட்டவரை விடுதலை செய்ததையடுத்து, பாதிக்கப்பட்ட பெண் மேன்முறையீட்டு நீதிமன்றத்தில் மேன்முறையீடு செய்திருந்தார்.

பாதிக்கப்பட்ட பெண் தாக்கல் செய்த மேல்முறையீட்டில் அவருக்கு மூன்று பிரிவுகளில் தண்டனை விதிக்கப்பட்டுள்ளதுடன் பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு 7இலட்சத்து 50ஆ யிரம் ரூபா இழப்பீடு மற்றும் அரசுக்கு 75 ஆயிரம் ரூபா அபராதமும் வழங்க உத்தரவிடப்பட்டுள்ளது.

2015 ஆம் ஆண்டு திருகோணமலை மேல் நீதிமன்று குற்றம் சாட்டப்பட்டவரை விடுதலை செய்ததையடுத்து பாதிக்கப்பட்ட பெண் மேன்முறையீட்டு நீதிமன்றத்தில் மேன்முறையீடு செய்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில் சம்பவம் தொடர்பில் நீதியரசர்களான சம்பத் பி.அபயகோன் மற்றும் பி.குமாரரத்தினம் ஆகியோர் மேற்படி தீர்ப்பினை வழங்கி இருந்தனர்.