பேய் வீட்டில் சிறுவன் மீது தாக்குதல் : களுத்துறையில் சம்பவம்!!

365

களுத்துறையில் பொசன் பெளர்ணமி தினத்தை முன்னிட்டு சிறுவர்களால் வடிவமைக்கப்பட்ட பேய் வீடொன்றிற்கு சென்ற மூவர், அங்கு பேய் வேடம் அணிந்திருந்த சிறுவன் ஒருவரை தாக்கி காயப்படுத்தியுள்ளனர்.

சம்பவத்தில் களுத்துறை வடக்கு , பெல்பொல பகுதியைச் சேர்ந்த 13 வயதுடைய சிறுவனே காயமடைந்துள்ளார். பொசன் பெளர்ணமி தினத்தை முன்னிட்டு சிறுவர்களால் வடிவமைக்கப்பட்ட பேய் வீட்டிற்கு பார்வையாளர்களாக சந்தேக நபர்கள் சென்றுள்ளனர்.

இதன்போது, காயமடைந்த சிறுவன் பேய் வேடம் அணிந்து இவர்களைப் பயமுறுத்தியதனால் , கோபமடைந்த மூவரும் சிறுவனை தாக்கி காயப்படுத்தியுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

காயமடைந்த சிறுவன் களுத்துறை போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். இந்நிலையில் தொடர்பான மேலதிக விசாரணைகளை களுத்துறை வடக்கு பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.