7 கோடியே 35 இலட்சம் ரூபா பெறுமதியான போதைப்பொருளுடன் வெளிநாட்டுப் பெண் ஒருவர் கட்டுநாயக்க விமான நிலையத்தில் வைத்து இன்று (20) காலை கைது செய்யப்பட்டுள்ளார். சம்பவத்தில் 57 வயதுடைய பாகிஸ்தான் நாட்டு பெண்ணொருவரே கைது செய்யப்பட்டுள்ளார்.
இவர் இன்று (20) காலை 9.45 மணியளவில் அபுதாபியிலிருந்து விமானம் மூலம் கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்துள்ளார்.
இதன்போது, விமான நிலைய அதிகாரிகளால் மேற்கொள்ளப்பட்ட சோதனை நடவடிக்கையில் இவர் கொண்டுவந்த பயணப் பொதியிலிருந்து 2 கிராம் 450 மில்லி கிராம் ஹெரோயின் போதைப்பொருள் கைப்பற்றப்பட்டுள்ளது.
கைது செய்யப்பட்ட சந்தேக நபர் மேலதிக விசாரணைகளுக்காக கட்டுநாயக்க விமான நிலைய பொலிஸ் போதைப்பொருள் ஒழிப்பு பிரிவினரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளார்.