மின்னல் தாக்கி 11 பேர் பரிதாபமாக உயிரிழந்த சோகம்!!

1626

இந்தியாவின் மேற்கு வங்க மாநிலத்தின், மால்டா மாவட்டத்தில் நேற்றைய தினம் (16.05) மின்னல் தாக்கி 11 பேர் உயிரிழந்துள்ள சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

கட்டணம் செலுத்தப்பட்ட விளம்பரம் || தேர்தல் விளம்பர தொடர்புகளுக்கு 0719567890

மேற்கு வங்கத்தில் பருவ மழை தொடங்கியுள்ள நிலையிலேயே இவ் அசம்பாவிதம் ஏற்பட்டுள்ளது. இவ்வாறு உயிரிழந்தவர்களில் மூன்று குழந்தைகளும் அடங்குவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை மின்னல் தாக்கியதில் பலர் காயமடைந்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் உயிரிழந்தவர்களின் குடும்பத்துக்கு தலா 2 லட்சம் ரூபாய் நிதியுதவி வழங்கப்படும் என மேற்கு வங்க அரசு அறிவித்துள்ளது.