வீதியில் நின்ற வேப்ப மரத்தால் பொலிஸ் உத்தியோகஸ்தருக்கு நேர்ந்த கதி!!

811

அநுராதபுரம் – கண்டி வீதியில் காவக்குளம் சந்தியில் பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவர் பயணித்த மோட்டார் சைக்கிள் மீது மரமொன்று வீழ்ந்ததில் அவர் படுகாயமடைந்துள்ளார்.

கட்டணம் செலுத்தப்பட்ட விளம்பரம் || தேர்தல் விளம்பர தொடர்புகளுக்கு 0719567890

இந்த விபத்து இன்று(17) காலை 7.30 மணியளவில் இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. அனுராதபுரம் பொலிஸ் நிலையத்தில் கடமையாற்றும் பொலிஸ் உத்தியோகத்தரே படுகாயமடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.



குறித்த பொலிஸ் அதிகாரி மோட்டார் சைக்கிளில் பயணித்த போது வீதிக்கு அருகில் இருந்த மரம் ஒன்று அவர் மீது விழுந்துள்ளது.

இந்நிலையில் படுகாயமடைந்த பொலிஸ் உத்தியோகத்தரை அநுராதபுரம் போதனா பொது வைத்தியசாலை அனுமதிக்கபப்ட்டுள்ளாக தெரிவிக்கப்படுகின்றது.