உடல்நலக் குறைவால் கணவர் மரணம்… சோகத்தில் மனைவி தூக்கிட்டு தற்கொலை!!

632

உடல் நலக்குறைவு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில், சிகிச்சை பலனளிக்காமல் கணவர் உயிரிழந்த சோகத்தில், மனைவி தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

கட்டணம் செலுத்தப்பட்ட விளம்பரம் || தேர்தல் விளம்பர தொடர்புகளுக்கு 0719567890

கடலூர் மாவட்டம் நடுவீரப்பட்டு அருகே உள்ள சூரியன்பேட்டையை சேர்ந்தவர் கந்தன் (வயது 48). இவரது மனைவி ராமவள்ளி (40) அரசு பஸ் கண்டக்டராக பணியாற்றி வந்தார்.

இவர்களுக்கு 2 மகன்கள் உள்ளனர். உடல் நலக்குறைவால் கடலூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த கந்தன் சிகிச்சை பலனின்றி நேற்று முன்தினம் பரிதாபமாக இறந்தார். அன்று மாலை அவரது உடல் தகனம் செய்யப்பட்டது.



கணவர் இறந்ததால், மனமுடைந்த ராமவள்ளி, வீட்டின் கழிவறையில் திடீரென தாக்கி தற்கொலைக்கு முயன்றார். இதனால் அதிர்ச்சியடைந்த அவரது உறவினர்கள் ராமவள்ளியை மீட்டு கடலூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி நேற்று அதிகாலை பரிதாபமாக இறந்தார்.

இதுகுறித்து நடுவீரப்பட்டு போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். கணவன் இறந்த துக்கத்தை தாங்க முடியாமல் மனைவி தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அப்பகுதி மக்களை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.