இன்ஸ்டகிராமில் 34 வயதுப் பெண்ணை காதலித்து திருமணம் செய்த 80 வயது முதியவர்!!

427

2கே கிட்ஸ் இன்னமும் திருமணமாகவில்லை என்று புலம்பிக் கொண்டிருக்க, இன்ஸ்டாவில் காதலித்து 34 வயசு பெண்ணைக் கரம் பிடித்திருக்கிறார் 80 வயது முதியவர் ஒருவர்.

கட்டணம் செலுத்தப்பட்ட விளம்பரம் || தேர்தல் விளம்பர தொடர்புகளுக்கு 0719567890

படித்தவர், சாமானியர், நகர்ப்புறம், கிராமம், ஏழை, பணக்காரர், இளைஞர்கள், முதியவர்கள் என சமூகத்தின் அனைத்துப் பிரிவினரையும் கையடக்க சாதனமாக ஸ்மார்ட்போன் ஆக்கிரமித்துள்ளது என்றால் அது மிகையாகாது. இன்றைய காலகட்டத்தில் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை ஸ்மார்ட்போன் இல்லாமல் இருப்பதில்லை.

சில சமயங்களில் ஸ்மார்ட்போன் நம்மை உட்கொள்கிறது என்று சொல்லலாம். ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம், வாட்ஸ்அப் மற்றும் ட்விட்டர் போன்ற சமூக வலைதளங்களை பொதுவாக பெரும்பாலான மக்கள் தங்கள் ஸ்மார்ட்போன்களில் பயன்படுத்துகின்றனர். சமூக வலைதளங்களில் ஒன்றான இன்ஸ்டாவை 2K குழந்தைகள் அதிகம் பயன்படுத்துவதாக கூறப்படுகிறது.



இந்நிலையில் காதல் காரணமாக நடந்த திருமணம் தான் தற்போது சமூக வலைதளங்களில் பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது. இந்நிலையில், மத்திய பிரதேச மாநிலத்தில் 80 வயது தாத்தா 34 வயது பெண்ணை திருமணம் செய்து கொண்ட சம்பவம் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

மத்தியப் பிரதேச மாநிலம், அகர் மாவட்டத்தில் உள்ள மகாரியா கிராமத்தைச் சேர்ந்த 80 வயது முதியவர் பலுராம் பக்கிரி. இதேபோல், மகாராஷ்டிர மாநிலம் அமராவதியைச் சேர்ந்த 31 வயது பெண் ஷிலா இங்கிள்.

இருவரும் சமூக வலைதளங்கள் மூலம் நண்பர்களாக பழகி வந்ததாக கூறப்படுகிறது. பின்னர் அந்த பழக்கம் நாளடைவில் காதலாக மாறியது. இருவருக்கும் வயது வித்தியாசம் அதிகமாக இருந்தாலும் அதை பெரிதாக எடுத்துக் கொள்வதில்லை.

பின்னர் இருவரும் திருமணம் செய்து கொள்ள முடிவு செய்தனர். அதன்படி, நண்பர்கள் மற்றும் குடும்பத்தினர் முன்னிலையில் மாலை மாற்றி திருமணம் செய்து கொண்டனர். இவர்களது திருமணம் நீதிமன்ற வளாகத்தில் நடந்தது.

தற்போது இந்த திருமணம் தொடர்பான புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வைரலாகி வரும் நிலையில் இந்த திருமணம் பல இணையவாசிகளை ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது.