உறவை துண்டித்த இன்ஸ்டா புகழ் ஆசிரியையின் கழுத்தை நெரித்து கொன்ற இளைஞன்!!

349

கர்நாடகவில்..

கட்டணம் செலுத்தப்பட்ட விளம்பரம் || தேர்தல் விளம்பர தொடர்புகளுக்கு 0719567890

கர்நாடக மாநிலத்தில் இன்ஸ்டாகிராம் மூலம் பிரபலமடைந்த தனியார் பள்ளி ஆசிரியை கொலையில் இளைஞர் ஒருவர் சிக்கியுள்ளார். 35 வயதான லோகேஷ், அவரது மனைவி தீபிகா, கர்நாடக மாநிலம், மாண்டியா மாவட்டம், பாண்டவபூர், மாணிக்யனஹள்ளி கிராமத்தில் வசிப்பவர்.

இந்த தம்பதிக்கு 8 வயதில் ஒரு பெண் குழந்தை உள்ளது. தீபிகா மேலுக்கோட்டில் உள்ள தனியார் பள்ளியில் ஆசிரியையாக பணியாற்றி வந்தார், இதற்கிடையில் இன்ஸ்டாகிராமில் தனது வீடியோக்களை வெளியிட்டு புகழ் பெற்றார். இன்ஸ்டாகிராமில் அவரது ரீல்களுக்கு பெரும் வரவேற்பு கிடைத்தது.



ஆனால், கடந்த 20ம் தேதி காலை பள்ளிக்கு சென்றவர் திரும்பி வரவில்லை. இதனால் அதிர்ச்சியடைந்த அவரது கணவர் லோகேஷ் பல இடங்களில் தீபிகாவை தேடியும் கிடைக்கவில்லை. இதையடுத்து மேலுக்கோடு காவல் நிலையத்தில் லோகேஷ் புகார் அளித்தார்.

போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ள நிலையில், மேலுக்கோடு யோக நரசிம்ம சுவாமி கோவில் அடிவாரத்தில், சாக்கு மூட்டையில், இரண்டு நாட்களுக்கு முன், பாதி புதைக்கப்பட்ட நிலையில், சடலம் கிடப்பதாக, போலீசாருக்கு தகவல் கிடைத்தது.

போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று பாதி அழுகிய நிலையில் உடலை தேடியபோது காணாமல் போனது தீபிகா என்பது தெரியவந்தது. முதற்கட்ட விசாரணையில் தீபிகா அந்த ரீல்களை வீடியோ எடுத்ததால் யாரோ அவரை கொன்று உடலை புதைத்துள்ளதாகவும்,

அதனால் தெரிந்தவர்கள் யாரேனும் கொலை செய்தார்களா? என்ற கோணத்திலும் போலீசார் விசாரணை நடத்தினர். இதற்கிடையே தீபிகாவுக்கும், ஒரு வாலிபருக்கும் மலையடிவாரத்தில் சண்டை நடந்தது.

அந்த வீடியோவை போலீசில் கொடுத்தனர். அதை போலீசார் விசாரித்தபோது, ​​தீபிகாவுடன் சண்டை போட்டது மாணிக்யனஹள்ளி கிராமத்தை சேர்ந்த நிதிஷ் கவுடா என்பது தெரியவந்தது. தீபிகாவின் குடும்பத்தினரும் நிதிஷை கொலை செய்ததாக குற்றம் சாட்டினர்.

தீபிகாவிடம் கடைசியாக செல்போனில் பேசியவர் இவர் என்பதும் தெரியவந்தது. தலைமறைவான அவரைப் பிடிக்க 2 தனிப்படைகள் அமைக்கப்பட்டன. இதையடுத்து, விஜயநகர மருத்துவமனையில் நிதீஷை மேலுக்கோட்டை போலீசார் சுற்றி வளைத்து கைது செய்தனர்.

தீபிகாவை கொல்லவில்லை என்று முதலில் கூறியவர், போலீஸ் விசாரணையில் கொலை செய்ததை ஒப்புக்கொண்டார். தீபிகாவும், நிதிஷும் ஒரே கிராமத்தை சேர்ந்தவர்கள் என்பதால், இரண்டு ஆண்டுகளுக்கு முன், இருவருக்கும் பழக்கம் ஏற்பட்டது. இருவரும் அக்கா, தம்பி போல் பழகி வந்துள்ளனர்.

இவர்கள் இருவருக்கும் இடையே தகாத தொடர்பு இருக்கலாம் என குடும்பத்தினர் சந்தேகிக்கின்றனர். நிதிஷிடம் பேசுவதை தவிர்க்குமாறு தீபிகாவுக்கு அறிவுறுத்தப்பட்டது. இதனால் நிதிஷிடம் பேசுவதை தவிர்க்க ஆரம்பித்தார்.

இதனால் ஆத்திரமடைந்த நிதீஷ் கவுடா, தன்னிடம் பேசுமாறு அவரை வற்புறுத்தினார். இதற்கு சம்மதிக்காத தீபிகா மீது கடும் கோபத்தில் இருந்த நிதிஷ் கவுடா, தீபிகாவை கொன்று விடலாம் என்ற முடிவுக்கு வந்துள்ளார். கடந்த 20ம் தேதி நிதிஷின் பிறந்தநாள் என்பதால், தீபிகாவிடம் செல்போனில் பேசிய நபர்,

உன்னை பார்க்க வேண்டும் என்று கூறியுள்ளார். நித்திஷின் பிறந்தநாள் என்பதால் அவரக்கு சட்டையை எடுத்துக்கொண்டு யோக நரசிம்ம ஸ்வாமி கோயிலின் அடிவாரத்தில் அவரை சந்திக்கச் சென்றுள்ளார் தீபிகா.

நிதிஷ், தீபிகா இடையே தகராறு ஏற்பட்டுள்ளது. ஒரு கட்டத்தில் தீபிகாவை நித்தீஷ் கழுத்தை நெரித்து கொன்றார். பின்னர் உடலை சாக்கு மூட்டையில் அடைத்து ஏற்கனவே தோண்டிய குழியில் புதைத்துவிட்டு தப்பியோடினார்.

தீபிகாவை காணவில்லை என அவரது கணவரும், பெற்றோரும் தேடியபோது, ​​தீபிகாவின் தந்தைக்கு நிதிஷ் அடிக்கடி போன் செய்து, ‘‘அக்கா வந்தாரா?’’ என கேட்டது விசாரணையில் தெரியவந்தது. போலீசார் நிதீஷ் மீது கொலை வழக்கு பதிவு செய்து கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.