திருகோணமலைக்கு சுற்றுலா சென்ற வேன் விபத்து!!

1083

அவிசாவளையில்..

கட்டணம் செலுத்தப்பட்ட விளம்பரம் || தேர்தல் விளம்பர தொடர்புகளுக்கு 0719567890

அவிசாவளையிலிருந்து திருகோணமலைக்கு வேனில் சுற்றுலா சென்றவர்கள் விபத்தில் சிக்கிய சம்பவம் ஒன்று பதிவாகியுள்ளது. சுற்றுலாவை முடித்துக் கொண்டு அதே வேனில் திரும்பிச் சென்றுக்கொண்டிருந்த போது, வீதியில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த கெப் ரக லொறிமீது வேன் மோதுண்டதில் இந்த விபத்து நேர்ந்துள்ளது.



இதன்போது வேனில் பயணித்த அவிசாவளையைச் சேர்ந்த வேன் சாரதி உட்பட 7 பேர் படுகாயமடைந்துள்ளனர். அத்துடன் முன்னால் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த கெப் ரக லொறியின் உதவியாளர் ஒருவரும் படுகாயமடைந்துள்ளார்.

விபத்தில் படுகாயமடைந்தவர்கள் மூதூர் தள வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதுடன் சம்பவம் தொடர்பிலான மேலதிக விசாரணைகளை சேருநுவர பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.