ஜெயபாலன் சிவதர்சன்..
யாழ்ப்பாணம் – அனலைதீவில் நேற்று புதன்கிழமை மாலை 5:00மணியளவில் உழவு இயந்திரத்திலிருந்து தூக்கி வீசிய இளைஞர் ஒருவர் உயிரிழந்துள்ளார். சம்பவத்தில் அனலைதீவு பகுதியைச் சேர்ந்த ஜெயபாலன் சிவதர்சன் வயது 25 என்ற இளைஞர் உயிரிழந்துள்ளார் .
உயிரிழந்தவரின் சடலம் உடல் கூற்று சோதனைக்காக யாழ் போதனா வைத்திய சாலையில் வைக்கப்பட்டுள்ளது. இளஞனின் மரணம் பெரும் துயரத்தை ஏற்படுத்தியுள்ள நிலையில் சம்பவம் மேலதிக விசாரணைகளை அனலைதீவு பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்